மங்கையராய் பிறப்பது
மாதவம
மகத்துவமாய் வாழும் போது
மானிடப் பிறப்பு புனிதமடையும்
மங்கையரின் தியாகத்தை
மனிதன் பெற்ற தாய் மூலம் அறிந்திடுவார்
மறந்திருந்தால்
மங்கிவிடும்
மனிதவாழ்வு
மங்கையருக்குள் இருக்கும்
மனதையும் புரிந்து கொண்டால்
மானிடனே பெண்மையை வாழவைப்பாய்
சமஉரிமை தேவையில்லை
சாபங்களிலிருந்து பெண் நீங்கி விடுவாள்
தாரமாய் வந்திடுவாள்
தன்னலமாய் வாழ்ந்திடாள்
மென்மையாய் பெண்ணிருந்து கொண்டால்
பொன்னகையும் தேவையில்லை - அழகே
பெண்ணே உனக்கு
தனுஷா சந்திரகுமாரன்
யாழ்ப்பாணம்
...................................................................................................................................................................................
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment