வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

மழை வானம்...

மழை
வானம் கறுக்கட்டும் வாட்டம் தெளியட்டும்
மேகம் மூட்டி மோதி இடி மின்னல் தோன்றட்டும்

பஞ்சம் பசி என்று பட்டினியாய் இருக்காமல்
கொஞ்சம் மழை வந்து கோடி உயிர் வாழட்டும்

பாடும் பறவையினம் கூடு வந்து சேரட்டும்
நாடும் நல்லவரும் பாடி மனம் மகிழட்டும்

பேடும் கடுவனுடன் பேரின்பம் காணட்டும்
காடும் கழனிகளும் களிப்போடு திகழட்டும்

கேடும் இல்லாமல் கெடுப்பாரும் இல்லாமல்
ஈடு இணை இல்லா அந்த இன்ப மழை பொழியட்டும்

இந்துஜா
சுவிஸ்

No comments:

Post a Comment