கருவினில் தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப் பொருள் அம்மா.
பயிராக்கி எம்மை பத்திரமாய்
காத்திட்ட போதிலும் பலன்
எதிர்பாராப் பாத்திரம் அம்மா.
இருப்புக்குள் விருப்பை இனிதுறச்
செய்பவள் அம்மா.
இல்லத்தின் அழகிய கோலம்
அம்மா.
பசி கிடந்து எம்
பசி போக்கும் நல்லவள் அம்மா.
வாட்டத்தின் நோட்டம் அறிந்து
வைத்தியம் செய்யும் வல்லவள் அம்மா.
அன்புக்கு அட்சய பாத்திரம்
அம்மா.
வலிகளை வாங்கி தனக்குள்
பலியாக்கும் பக்குவம்
நிறைந்தவள் அம்மா.
நாட்டிற்கு நல்ல பிரதிநிதியை
வழங்குபவள் அம்மா.
ஊணை உருக்கி
உயிரைக் கருக்கி
தன்னைத் தாரை
வார்ப்பவள் அம்மா.
ரி.தயாநிதி
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment