வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

அம்மா

கருவினில் தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப் பொருள் அம்மா.

பயிராக்கி எம்மை பத்திரமாய்
காத்திட்ட போதிலும் பலன்
எதிர்பாராப் பாத்திரம் அம்மா.
இருப்புக்குள் விருப்பை இனிதுறச்
செய்பவள் அம்மா.

இல்லத்தின் அழகிய கோலம்
அம்மா.
பசி கிடந்து எம்
பசி போக்கும் நல்லவள் அம்மா.
வாட்டத்தின் நோட்டம் அறிந்து
வைத்தியம் செய்யும் வல்லவள் அம்மா.

அன்புக்கு அட்சய பாத்திரம்
அம்மா.
வலிகளை வாங்கி தனக்குள்
பலியாக்கும் பக்குவம்
நிறைந்தவள் அம்மா.
நாட்டிற்கு நல்ல பிரதிநிதியை
வழங்குபவள் அம்மா.

ஊணை உருக்கி
உயிரைக் கருக்கி
தன்னைத் தாரை
வார்ப்பவள் அம்மா.


ரி.தயாநிதி

No comments:

Post a Comment