வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

மண் மீட்க வந்த மாதவங்கள்!!!!!

மாரி மழையாகி நீர் தெளித்து ஆடி
மண் குளிரச்செய்த முகில்கள்
மாதவங்கள் செய்த போதெமது பூமி
மடியில் உருவான எங்கள் உன்னதங்கள்
போரில் விளையாடும்போது உடல் வீழ்ந்த போதும்
உயிராக இருக்கும் சிலைகள் அவர்கள்
பூங்குயில்கள் பாடும் ஈழமதை மீட்க
போய்எரிந்து போன எங்கள் புலிகள்
மாலை ஆறுமணி ஆகும் பொழுதாக
மாரிமழை கொஞ்சம் ஓயும்
மாலை,மலர் சாத்தி தீப ஒளிகாட்டும்
வேளைதனில் உறவுகள் விழிதனிலே ஆறுபாயும்
சாதி,மதம் என்று வேறுபடல் இன்றி
தேவநிலை கொண்டு பாடும்
வாரி எடுத்தும்மை வாசல்தனில் வைத்து
வாசமலர் தூவும் பொழுதினில்
வந்தெமது கண்ணில் நின்று தெரிகின்றவாறு
வரவேண்டும் எம் செல்வங்கள் அருகில்
தேரில் எழுந்தெங்கள் தீப ஒளிகாண
தேடிவரவேண்டும் உறவு
தேசமெல்லாம் நின்று குளிர் ஒளி வீசும் காற்றில்
சேர்ந்து வரவேண்டும் எமது தெய்வங்கள்


வே.சுதன்.
பிரான்ஸ்.
........................................................................................

No comments:

Post a Comment