கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்
இதையத்திற்கு இதையம்
கட்டியதல்ல தாச்மகால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதையம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்கிச் சின்னமே தாச்மகால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்
காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதையத்திற்குள்
கடலே அடக்கம்
காதலரே
காலத்தால் அழியாத காதல் சின்னம் கலங்கரை ஒளியே
இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.
வல்வை சுஜேன்.
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment