வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

காதல் சின்னம்

கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்

இதையத்திற்கு இதையம்
கட்டியதல்ல தாச்மகால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதையம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்கிச் சின்னமே தாச்மகால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்

காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதையத்திற்குள்
கடலே அடக்கம்
காதலரே
காலத்தால் அழியாத காதல் சின்னம் கலங்கரை ஒளியே
இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.


வல்வை சுஜேன்.

No comments:

Post a Comment